மக்கள் மீது துப்பாக்கிச்சூடு: ஆப்கானில் பயங்கரம்

ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிராக போராடியவர்களை துப்பாக்கியால் சுட்டு தாலிபான்கள் விரட்டியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

மக்கள் மீது துப்பாக்கிச்சூடு:  ஆப்கானில் பயங்கரம்

ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிராக போராடியவர்களை துப்பாக்கியால் சுட்டு தாலிபான்கள் விரட்டியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசியக் கொடியுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது தாலிபான்களுக்கு எதிரான கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். அப்போது அங்குவந்த தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும்  கூறப்படுகிறது. ஆப்கனில் அமைதியான ஆட்சியை நடத்த விரும்புவதாக தாலிபான்கள் தெரிவித்துள்ள நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது இத்தகைய தாக்குதல் நிகழ்த்தப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது