கணவனின் தம்பியை திருமணம் செய்த இளம்பெண்...மைத்துனரின் வெறிச்செயல்....

கணவரை இழந்த பெண் ஒருவர் அவரது மைத்துனரையே மறுமணம் செய்து கொண்ட நிலையில் பணத்திற்காக அப்பெண்ணின் இரண்டாவது கணவரே சுட்டுக்கொலை செய்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் நிகழந்துள்ளது.

கணவனின் தம்பியை திருமணம் செய்த இளம்பெண்...மைத்துனரின் வெறிச்செயல்....

உத்திரபிரதேச முசாபர்நகர் மாவட்டதில் உள்ள புதனா நகர் கிராமத்தை சேர்ந்தவர் அல்ஹா.இவருக்கும் பிரமோத் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று உள்ளது.

இதனிடையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பிரமோத் சந்தேகத்திற்கு இடமான வகையில் கொல்லப்பட்டார்.அவரது உயிரிழப்பை தொடர்ந்து அல்ஹா தனது கணவரின் தம்பியான மனோஜ் குமார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

இதனை தொடர்ந்து அல்ஹா தனது வங்கிகணக்கில் ஒரு குறிபிட்ட பணத்தொகையை இருப்பில் வைத்துள்ளார்.அந்த பணத்தினை எடுத்து தருமாறு கணவர் கேட்ட நிலையில் அதனை அவர் தர மறுக்கவே அவர்களுக்கிடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை அன்று மீண்டும் மனோஜ் அந்த பணத்தை எடுத்து தரும்படி கேட்டுள்ளார்.அதற்கு அல்ஹா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.வாக்குவாதம் இருவருக்கும் முற்றிய நிலையில் மனோஜ் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அல்ஹாவை சுட்டுள்ளார்.இதில் துப்பாக்கி குண்டுகள் அல்ஹாவின் உடம்பில் பாய்ந்து அவர் படுக்கையில் சாய்ந்தபடியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மனோஜ் குமாரையும் அவருக்கு உதவியாக இருந்த மனோஜ்ஜின் தந்தையையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.