மீண்டும் மரியுபோல் திரும்பும் உக்ரைன் வாசிகள் !

மீண்டும் மரியுபோல் திரும்பும் உக்ரைன் வாசிகள் !

உக்ரைனின் மரியுபோலில் இருந்து வெளியேற்றப்பட்ட  50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  தற்காலிக தங்குமிடத்திற்கு  பேருந்துகளில் திரும்பினர். ரஷ்யாவின் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட மரியுபோல் நகரில்  இருந்து ஏராளமானோர்  வெளியேற்றபட்டனர்.

இந்தநிலையில்  நாடு கடத்தப்பட்டவர்கள்  உக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ள சபோரிஷியா நகருக்கு வரலாம் என்று ஜெலென்ஸ்கி  தெரிவித்து இருந்தார்.

அவரது  வேண்டுகோளை ஏற்று பலர் பேருந்துகளில்  பிசிமின் கிராமத்திற்கு வந்தனர். ரஷ்யாவின் தாக்குதலில் மரியுபோல் நகர் நிலைகுலைந்து போய் உள்ளது. தற்போது அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.