மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.,பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி.! 

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.,பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி.! 

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போக்சா நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசியராக உள்ளவர் ராஜகோபால், இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரில் ராஜகோபால் 24 ஆம் தேதி கைதானார். 

இந்த நிலையில் ராஜகோபால் ஜாமீன் கோரி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மற்றும் ராஜகோபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ராஜகோபாலை 5 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு நீதிபதி முகமது பரூக் முன்பு காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர் ராஜகோபாலனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

 நீதிமன்ற காவலில் அடைத்தது குறித்த விவரங்கள் நீதபதி முன்பு தாக்கல் செய்யபட்டது. பின்னர் ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் மீண்டும் ராஜகோபாலனை ஜூன் 3 ஆம் தேதி ஆஜர்படுத்தவும்  நீதிபதி உத்தரவிட்டார்.