எந்தவொரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வு அல்ல… டெல்லி போராட்டம் குறித்து ராகுல்காந்தி கருத்து

வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான இன்று தில்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது.
இன்று காலை முதல் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி டெல்லி எல்லைகளில் இருந்து விவசாயிகள் நகருக்குள் நுழைந்து வருகின்றனர். சுமார் 500 டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்துள்ள அவர்கள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். செங்கோட்டையில் உள்ள சிறிய கோபுரத்தில் விவசாய சங்கங்களின் கொடிகளை ஏற்றினர்.
டெல்லியில் பல்வேறு இடங்களில் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்து வருகிறது. குடியரசு தினத்தையொட்டி, முக்கிய பகுதிகளில் நுழையக்கூடாது என்று காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால், தடுப்புகளை மீறி விவசாயிகள் தற்போது செங்கோட்டை பகுதியை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்ராகுல் காந்தி வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு அல்ல. இதில் யாராவது காயமடைந்தால், அது நமது சேதத்திற்கான சேதமாகும் என தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் நாட்டின் நலனுக்காக வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறுங்கள் என்றும் அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.
http://bio-catalyst.com/ – minocin generic
buy chloramphenicol generic
[url=http://bio-catalyst.com/]bactrim online[/url] order minocin online