பசுமை மயானங்கள் அமைக்க உத்தரவு! அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் கடிதம்!!

பசுமை மயானங்கள் அமைக்க உத்தரவு! அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் கடிதம்!!

பசுமை மயானங்களை உருவாக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் “பசுமை மயானங்களை” உருவாக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடுகாடு மற்றும் சுடுகாடுகளுக்கு வரக்கூடிய பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும், செடிகள் மற்றும் மரங்களை நட்டு பசுமை மயானங்களை உருவாக்கிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிக இறப்புகள் நடைபெறும் நகர்புறங்களில் மயானங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என புகார் எழுந்து வரும் நிலையில், அதனை சீரமைக்கவும், பசுமை மயானங்களாக உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com