வெள்ளத்தில் சிக்கிய காண்டாமிருகம் மீட்பு

அசாம் மாநிலம் காசிரங்கா தேசியப் பூங்காவில் வெள்ளத்தில் சிக்கிய காண்டாமிருகம் மீட்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய காண்டாமிருகம் மீட்பு
DD2
Published on
Updated on
1 min read

அசாம் மாநிலத்தில் பெய்துவரும் தொடர் மழையால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. அதன்படி காசிரங்கா தேசியப் பூங்காவில் 173 முகாம்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில் ஹல்திபரி என்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கிய காண்டாமிருகத்தை பன்பாரி வனவிலங்கு மீட்பு மற்றும் நிவாரண மையமும் வனத்துறையும் இணைந்து மீட்டுள்ளன. வெள்ளம் காரணமாக, காசிரங்கா தேசியப் பூங்காவில் இதுவரை 11 விலங்குகள் உயிரிழந்துள்ளன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com