அசாம் மாநிலத்தைத் தொடர்ந்து மேகாலயா மாநிலத்திலும் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த ஒருவாரமாக இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக மேகாலாயாவின் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையோர குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை தொடர்வதால் வெள்ள அபாயம் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேபோல் மணிப்பூர் மாநிலத்திலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.