இத்தாலியில் உள்ள எட்னா எரிமலையின் சாம்பலால் அருகில் உள்ள நகரங்களின் சாலைகள் மற்றும் வாகனங்கள் சாம்பல்கள் மூடப்பட்டு காணப்படுகிறது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மூன்று பெரிய எரிமலைகளில் ஒன்றான சிசிலி நகரில் அமைந்துள்ளது எட்னா எரிமலை கடந்த மாத இறுதியில் வெடிக்கத் துவங்கிய நெருப்பு குழம்புகளை வெளியிட்டு வந்தது . இந்நிலையில் அதன் நெருப்பு சாம்பல்கள் கேடானியாவுக்கு அருகிலுள்ள நகரங்களின் சாலைகளில் மூடிக்காணப்படுகிறது. அங்கு நிற்கும் வாகனங்களை மூடியபடி காணப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் சாம்பலை தூய்மை படுத்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.