கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்... இருவருக்கு அரிவாள் வெட்டு...

பொன்னேரி அருகே கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு. மாநிலக் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் காயம்.
கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்... இருவருக்கு அரிவாள் வெட்டு...

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கார்த்திக், ஆகாஷ் ஆகிய இருவர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 20க்கும் மேற்பட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் இருவரிடம் தகராறில் ஈடுபட்டு ரயில் நிலையத்தில் பயங்கர மோதலாக மாறி ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கி ஓட்டம் பிடித்து மோதிக் கொண்டனர்.  தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கார்த்திக், ஆகாஷ் ஆகிய இருவரை அரிவாளால் வெட்டி விட்டு மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com