திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.83 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..!

கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கார் நிலை தடுமாறி அடுத்தடுத்து நான்கு வாகனங்களின் மீது மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
மலப்புரம் அருகே பாண்டிக்காடு குறுக்கு சாலையில் இருந்து அதிவேகமாக வந்த கார் நிலை தடுமாறி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் படுகாயமடைந்த ஐந்துக்கும் மேற்பட்டோரை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: இசைக்காகவே 70 ஆண்டுகள் வாழ்க்கையை அர்ப்பணித்த கலைப்பெட்டகம்.......
சேலத்தில் பட்டறை உரிமையாளரை முகமூடி அணிந்த மர்மகும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
செவ்வாய்பேட்டை சேர்ந்த பட்டறை உரிமையாளர் சிவகுமாருக்கும், ஏழுமலை என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் காரணமாக பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் பட்டறையில் இருந்த சிவகுமாரை, முகமூடி அணிந்து வந்த மர்மகும்பல் இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் சராமரியாக தாக்கினர். இந்த காட்சி வைரலாகி வருகிறது.
திருச்செந்தூர் அருகே கிராம சபை கூட்டத்தை செல்போனில் வீடியோ எடுத்த ஒருவரை பஞ்சாயத்து தலைவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசு நாளையொட்டி காயாமொழி பஞ்சாயத்து அலுவகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொது மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததை அப்பகுதியை சேர்ந்த ராஜகுமாரன் என்ற வழக்குரைஞர் செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்து பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரன் இருக்கையில் இருந்து ஆக்ரோசமாக எழுந்து படம் எடுத்தவரின் சட்டை கிழித்து தாக்குதல் நடத்தினர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: பதைபதைக்க வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள்..!
மன்னார்குடி அருகே காரின் முன்பக்க டயர் வெடித்து விளம்பர பலகையின் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திருவாரூர் | மன்னார்குடி அருகே மன்னார்குடி பைபாஸ் பகுதியில் பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் மகாதேவ பட்டினத்தில் இருந்து வந்திருந்த கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருக்கும் பொழுது காரின் முன்பக்க டயர்வெடித்தது.
அதில் நிலை தடுமாறி அருகில் இருந்த தனியார் சேவை அமைப்பின் பெயர் பலகை மீது மோதி நின்றது. அங்குநின்ற பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு யாருக்கும் எவ்வித உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல இருந்த மாணவ மாணவியா்கள் நூலிலையில் உயிர் தப்பினார்கள்.
மேலும் படிக்க | ‘துணிவு’ படத்துக்காக பலியான மேலும் ஒரு உயிர்...
மாணவர்கள் பேருந்துகாக காத்திருக்கும் பொழுது மாணவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு மிக அருகில் காரின் டயர் வெடித்த காரை ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் மாணவர்கள் மீது கார் மோதாமல் பெயர் பலகையில் மோதி காரை நிறத்தினார்.
இந்த வேகமாக வந்த காரின் டயர் வெடித்து பெயர் பலகையில் மேதும் சிசிடிவி காட்சி தற்போது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து...
அரசு பள்ளியில் சொத்து பிரச்சனை காரணமாக சகோதரனே பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டியுள்ளார்.
விழுப்புரம் | கோலியனூர் அரசு மேல்நிலை பள்ளியில் அரியலூரை சார்ந்த நடராஜன் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு வந்த நடராஜனிடம் அவரது சகோதரர் ஸ்டாலின் தான் வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பி வைத்த பணத்தை கொடுக்க வேண்டும் சொத்து பிரச்சனையை தீர்க்க வேண்டும் என கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.
மேலும் படிக்க | பெட்ரோல் பங்கில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் கொன்று தற்கொலை...
அப்போது நடராஜன் பள்ளியில் வந்து இது பற்றி பேசவேண்டாம் என பிடிகொடுக்காமல் பேசவே ஆத்திரமடைந்த சகோதரரான ஸ்டாலின் மறைத்து வைத்திருந்த கத்தியால் கை மற்றும் முதுகு பகுதியில் வெட்டவே அருகிலிருந்த மாணவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதில் பள்ளி மாணவன் ஒருவனுக்கு கை விரலில் லேசான காயமும் ஆசிரியருக்கு வெட்டு காயம் ஏற்படவே உடனே முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் ஆசிரியரை அனுமதித்தனர்.
இச்சம்பவத்தில் கத்தியால் வெட்டிய ஸ்டாலினை மாணவர்கள் ஆசிரியர்கள் பிடித்து வளவனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் ஸ்டாலின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் படிக்க | தண்ணீர் பாய்ச்ச சென்ற மூதாட்டி வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்...