இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம்....பின்னணி என்ன?!!!

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம்....பின்னணி என்ன?!!!

கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ. 25 லட்சத்தி 73 ஆயிரம்  மதிப்புள்ள 516 கிராம் தங்கம் பறிமுதல் 2 இலங்கை பெண்கள் கைது.

ரகசிய தகவல்:

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். 

இலங்கை பெண்கள்:

அப்போது கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 2 இலங்கை பெண்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.  முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர்.  அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். 

சோதனை:

2 பெண்களும் உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ. 25 லட்சத்தி 73 ஆயிரம் மதிப்புள்ள 516 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர். 

விசாரணை:

இது தொடர்பாக 2 பெண்களையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தலில் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என  விசாரித்து வருகின்றனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  சபரிமலை சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதென்ன.....