கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த 61 வயதான கணபதி, தமது வீட்டில் அவ்வப்போது பூஜைகள் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அதே பகுதியில் தந்தையை இழந்த 14, 15 மற்றும் 17 வயதுடைய சகோதரிகளான 3 பேரும், கணபதி நடத்தும் பூஜைகளுக்கு சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சிறுமிகள் 3 பேரையும் தனித்தனியே வரச்சொல்லி, அவர்களுக்கு தீர்த்தம் மற்றும் பொங்கலை கணபதி கொடுத்துள்ளார். அப்போது, சிறுமிகளுக்கு தனித்தனியே பலமுறை பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், போக்சோ, பெண்கள் வன்கொடுமை, ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் ஆகிய 4 சட்டங்களின் கீழ் கணபதியை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், பாலியல் ரீதியாக சிறுமிகளை துன்புறுத்தியதற்காக கணபதிக்கு 29 ஆண்டுகள் மற்றும் 3 மாதம் சிறை தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.