டிடிஎப் வாசனின் ஜாமீன் மனு... இரண்டாவது முறையாக தள்ளுபடி!!

பிரபல யூட்யூபில் டிடிஎஃப் வாசன் விபத்து ஏற்படுத்திய ஜாமின் கேட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இராண்டவது முறையாக மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பிரபல யூடூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் பகுதியில தனது உயர்ரக பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்று, நிலை தடுமாறி பள்ளத்தி கவிழ்ந்து காயமடைந்தார்.

அந்த விபத்தில், கை முறிவு காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு சென்ற நிலையில் பாலு செட்டி சத்திரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல்  டிடிஎப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டு வரும் அக்டோபர் 3- தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அன்றே ஜாமீன் கேட்ட நிலையில் ஜாமீன் மனுவை நீதிபதி இனிய கருணாகரன் தள்ளுபடி செய்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் எண் 2-ல் நீதிபதி செம்மல் முன்னிலையில் ஜாமீன் கேட்டு டிடிஎஃப் வாசனின் வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

ஜாமீன் கேட்டு வந்த மனு மீது வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் டிடிஎப் வாசன் மீது விபத்து ஏற்படுத்தும் வழக்குகள் தொடர்ந்து வருவதால், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி, வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்காமல் மாவட்ட நீதிபதி செம்மல் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் மீண்டும் இன்று இரண்டாவது முறையாக டிடிஎஃப் வாசன் வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் ரெண்டில் நீதிபதி செம்மல் மேல் நிலையில் வாதம்  விசாரணைக்கு வந்தது. 

வாசன் தரப்பில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர், வெங்கட்ராமன்  ஆகியோர் உடல்நிலை சரியில்லாமல் டிடிஎஃப் வாசன் இருப்பதாகவும் வாசனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதாடினார். அரசு தரப்பில் ஆஜரான கார்த்திகேயன், டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் இது தவறான முன் உதாரணமாக அமையும் என வாதாடினார் 

இதனை தொடர்ந்து நீதிபதி இன்னும் புலனாய்வி விசாரணை முடிவடையாது நிலையில் ஜாமீன் வழங்க முடியாது தெரிவித்தார்.

இதையும் படிக்க || மழை நேரத்தில் எலெக்ட்ரிக் ஆட்டோவில் கை வைத்த நபர்... தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பரிதாபம்!!