சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு... சிலிண்டர் விபத்தால் பரபரப்பு...

கோவையில் காரில் மா்மமான முறையில் சிலிண்டா் வெடித்து ஒருவா் உயிரிழப்பை தொடரந்து விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் கோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு... சிலிண்டர் விபத்தால் பரபரப்பு...

கோவையில் காரில் எடுத்து வந்த 2 சிலிண்டர்களில் ஒரு சிலிண்டா் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்தாா். இது குறித்து  போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில்  சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு 5 அடுக்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய்களுடன் வரவழைக்கப்பட்டு,பயணிகளின் உடமைகள் சோதனைகள் நடத்தப்படுகிறது.மத்திய தொழில் பாதுகாப்புபடையினருக்கு கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்பட்டதுடன்,விடுமுறையில் இருப்பா்களையும் பணிக்கு அழைத்துள்ளனா்.

சென்னை சென்டரல், எழும்பூர், திருச்சி ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகு ரயில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர். ரயில் நிலையம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. 

திருவண்ணாமலை அண்ணாமலை கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சங்கரன் கோவில் சங்கர நாரயணர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com