திருச்சியின் முசிறி அருகே நடந்த சேவல் கண்காட்சி...

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அய்யம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை கிளி மூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி நடைபெற்றது.
திருச்சியின் முசிறி அருகே நடந்த சேவல் கண்காட்சி...
Published on
Updated on
1 min read

திருச்சி | இரண்டாம் ஆண்டு நடைபெற்ற சேவல் கண்காட்சியில் ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட கிளி மூக்கு விசிறிவால் சேவல்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

இந்த கண்காட்சியில் முதலிடம் பிடிக்கும்10 சேவலுக்கு இரண்டு கிராம் தங்க நாணயமும், இரண்டாம் இடம் பிடிக்கும் 20 சேவல்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், மூன்றாம் இடம் பிடிக்கும் 70 சேவல்களுக்கு  சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த கண்காட்சி காண ஏற்பாடுகளை திருச்சி ராக்போர்ட் அசில் ஆர்கனைசேஷன் அனைத்து மாவட்ட சேவல் சங்கத்தினர் இணைந்து செய்திருந்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com