கார்த்திகைக்கு தயாராகும் விதவிதமான தீப விளக்குகள்...

திருகார்த்திகையை முன்னிட்டு திண்டுக்கல்லில்  விதவிதமான தீப விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கார்த்திகைக்கு தயாராகும் விதவிதமான தீப விளக்குகள்...

திண்டுக்கல் : திருக்கார்த்திகை தீப பண்டிகை முன்னிட்டு திண்டுக்கலில் விதவிதமான தீப விளக்குள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மாலையில் அகல் விளக்குள் ஏற்றிவைப்பது வழக்கம். வீடுகளில் பல்வேறு வடிவிலான தீப விளக்குள் ஏற்றி பெண்கள் வழிபாடு நடத்துவார்கள். இதனால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

மேலும் படிக்க | 116 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை... ஆவின் நிறுவனத்தின் தீபாவளி கொண்டாட்டம்...

இதற்காக திண்டுக்கல்லில் பல்வேறு விதவிதமான விளக்குள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் அடுத்த நொச்சியோடைப்பட்டியில் சுயஉதவி குழுக்கள் மூலம் களிமண்ணால் பல வடிவங்களில் விளக்குள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள் மதுரை, திருநெல்வேலி, கோவில்பட்டி, நாகர்கோயில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடக ஆகிய வெளி மாநிலங்களுக்கும் அனுப்பட்டு வருகிறது. விநாயகர், யாணை முகம், மயில், சிவலிங்கம், லெட்சுமி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | பால் விலை உயர்வு அனைவருக்கும் இல்லையாம் - அமைச்சர் விளக்கம்!

சங்கு, சக்கரம், அரச இலை, ஒரு முகம், 5 முகம் உள்ளிட்ட விளக்குகள் பெண்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளன. இதனை ஆர்வத்துடன் அனைத்து தரப்பினரும் வாங்கி செல்கின்றனர். இது குறித்து கடையின் உரிமையாளர் கஜேந்திரன் கூறுகையில், வருடம் முழுவதும் சீசனுக்கு தகுந்தவாறு களிமண் பொருட்கள் செய்து வருவதாகக் கூறினார்.

மேலும், திருகார்த்திகையை முன்னிட்டு அகல் விளக்கு அதிகளவு தயாரித்துள்ளோம். அடுக்கு விளக்குகளை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஒரு ரூபாய்  முதல் 400 வரையிலான விளக்குள் விற்பணைக்கு வைத்தள்ளோம். 5 முதல் 21 விளக்குகள் கொண்ட அடுக்கு விளக்குள், லெட்சுமி விநாயகர் விளக்கு,  விசிறி விளக்குகள், லிங்க விளக்கு இந்தாண்டு அறிமுகம் செய்துள்ளோம் என்றார்.

மேலும் படிக்க | ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை அதிரடி உயர்வு...விளக்கமளிக்கும் அமைச்சர்!