முள்ளங்கி விலை வீழ்ச்சி...! டிராக்டர் மூலம் உழுது அழித்த விவசாயி...!

முள்ளங்கி விலை வீழ்ச்சி...!   டிராக்டர் மூலம் உழுது அழித்த விவசாயி...!

ஓசூர் அருகே உள்ள ஆலூர் தின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமமூர்த்தி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் முள்ளங்கி பயிர்களை பயிரிட்டிருந்தார். இதற்காக அவர் ரூபாய் 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளார். முள்ளங்கி நன்கு விளைந்த நிலையில் ஏற்கனவே ஒரு முறை ராமமூர்த்தி அறுவடை செய்தார். தற்போது சந்தைகளில் முள்ளங்கிகளுக்கு போதிய  விலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஒரு கிலோ முள்ளங்கி சந்தையில் 18 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், விவசாய தோட்டங்களில் விவசாயிகளிடம் ஒரு கிலோ முள்ளங்கி 4 ரூபாய் 5 ரூபாய்க்கும் விலை கேட்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பல விவசாயிகள் முள்ளங்கிகளை பறிக்காமல் விட்டுள்ளனர்.

முள்ளங்கி விலை வீழ்ச்சியடைந்ததால் வேதனையடைந்த விவசாயி ராமமூர்த்தி, தனது 2 ஏக்கர் நிலத்தில் பயிரிடபட்டிருந்த முள்ளங்கிகளை டிராக்டர் கொண்டு உழுது அழித்தார். இதில் சுமார் 15 டன் முள்ளங்கிகள் சேதமானதாக தெரிவித்தார். இந்த நிலத்தில் அடுத்ததாக சந்தையில் நல்ல விலை போகும் மலர்கள் அல்லது முட்டைகோஸ் போன்ற பயிர்களை நடவு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com