திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் ஆய்வு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவரவர் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக பேருந்து மற்றும் ரயில்களில் அதிக அளவு பயணம் மேற்கொண்டு வருகின்றனர் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்யும்போது பட்டாசுகள் மற்றும் வெடிபொருட்கள் எதுவும் எடுத்து சொல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது,
பட்டாசு எடுத்துச் செல்லத் தடை
விதியை மீறி யாரும் எடுத்துச் செல்கிறார்களா என்பதைத் தொடர்ந்து பேருந்து மற்றும் ரயில்களில் போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரையும் தீவிர சோதனை செய்த பின்னரே ரயில் நிலையத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
ரயில்வே போலீஸார் சோதனை
மேலும் ஸ்கேனர் கருவி மற்றும் மோப்பநாய் டான் உதவியுடன் பயணிகள் எடுத்து வரும் உடமைகளை சோதனை செய்த பின்னரே ரயில் நிலையத்திற்குள் பயணிகளை அனுமதித்தனர்.விதியை மீறி யாரேனும் பட்டாசுகள் மற்றும் வெடி பொருட்கள் எடுத்து வந்தால் அவற்றை காவல்துறையினரால் பறிமுதல் செய்து அறிவுறுத்தி அனுப்பி வைக்கின்றனர்.