தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக பெங்களூரு விமான நிலையத்தில், நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து பேசியபோது, தன்னையும் தனது சாதியையும் இழிவுப்படுத்தி பேசி, தாக்கியதாக கூறி சென்னையை சேர்ந்த மகா காந்தி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று ஆஜரான விஜய சேதுபதி தரப்பு விளம்பர நோக்கத்துடன், மூன்று கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டதாக வாதிடப்பட்டது குறிப்பிடதக்கது