ரீ எண்டரி கொடுக்கும் சுப்ரமணியபுரம் பட நாயகி..! படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரல்..!
சினிமாவில் ரீ-எண்டரி கொடுக்கும் ஸ்வாதி..!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க மாநாட்டிற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஆனால் அரசு அனுமதி வழங்காததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட ரூ. 29.50 லட்சத்தை திரும் கேட்டபோது, முன்தேதியிட்ட காசோலையை ரஹ்மான் வழங்கியும், பணம் இல்லாமல் திரும்பி வந்ததால், ரஹ்மான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு, அது தொடர்பாக வழக்கறிஞர் ஷப்னம் பானு மூலமாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதுசம்பந்தமாக ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நர்மதா சம்பத் பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், இசைத் துறையில் பல்வேறு விருதுகளை பெற்று மதிப்புமிக்க நபராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் சமூகத்தில் பல தலங்களிலும் பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார் என்றும்,
அவரை பற்றி ASICON 2018 நிகழ்ச்சி நடத்திய இந்திய சர்ஜன் சங்கத்தால் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு அவரது நற்பெயரை கெடுக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அசிக்கான் அமைப்புட்ன ரஹ்மான் எவ்விதத்திலும் தொடர்பிலோ, ஒப்பந்தத்திலோ இல்லாத நிலையில், மலிவான விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளார்கள் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
தனக்கு கொடுத்ததாக கூறப்படும் பணத்தை தான் பெறவில்லை என ரஹ்மான் கூறுவதாகவும், மூன்றாவது நபரிடம் பணத்தை கொடுத்துள்ள இந்திய சர்ஜன் சங்கம் தேவையில்லாமல் ரஹ்மான் பெயரை இதில் ஈடுபடுத்தி உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஹ்மானுக்கு அனுப்பிய நோட்டீசை 3 நாட்களில் திரும்பப்பெற வேண்டும் என்றும், பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சமூகத்தில் உள்ள நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயை தர வேண்டும் என்றும், தவறினால் சட்ட ரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் வழக்கறிஞர் நர்மதா சம்பத் அனுப்பியுள்ள நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை நீதிமன்றம் கேள்வி ..!
ரஜினி, விஜயகாந்த், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்.
தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான பாபா திரைப்படத்தில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணிபுரிந்து, என்னம்மா கண்ணு, பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ துரை.
இதையும் படிக்க : இன்று முதலமைச்சர் தலைமையில் ஆட்சியர், காவல்துறையினர் மாநாடு...!
இவர் கடந்த சில மாதங்களாகவே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு சிகிச்சை பலனின்றி வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். முன்னதாகவே, இவருக்கு நீரழிவு நோய் இருந்ததால் ஆபரேஷன் மூலம் ஒரு கால் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் வி.ஏ.துரை உயிரிழந்துள்ளது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரது உடல் அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
எல்லைகளை வரையறுக்கவே மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அதை தவிர்த்து. நாம் அனைவரும் ஒன்று என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என நடிகர் ஆதி பேட்டியளித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை சார்பில் பொதுமக்களிடையே இதயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக இதய தினத்தை முன்னிட்டு 300 பேர் இணைந்து இதய வடிவ மனித சங்கிலி அமைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டு பொதுமக்களிடையே இதயம் குறித்து கலைந்துரையாடினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆதி, உலக இதய தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் உடல் பயிற்சி செய்ய வேண்டும் எனக் கூறினார்.
எல்லோரும் சாதிக்க வேண்டும் என நினைப்பார்கள். அதற்காக எல்லோரும் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் அவற்றிற்காக, வாழ்க்கையில் அதிகமாக மன அழுதத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்
மேலும், கர்நாடகாவில் நடிகர் சித்தார்த் செய்தியாளர் சந்திப்பின்போது அவமதிக்க பட்டது குறித்த கேள்விக்கு, நாம் எல்லோரும் ஒன்று தான் என்பதை எல்லோரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எதற்காக தமிழ் நாடு, கர்நாடகம் என்று பார்டர் பிறிக்கிறார்கள் என்று தெரியவில்லை. தவறு என்பது யார் செய்தாலும் தவறுதான் என்று தெரிவித்தார். நம் நாட்டை நேசிப்பது மட்டுமில்லாமல், நம்மை நேசிப்பவர்களையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிக்க: குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!
கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கின் காரணமாக தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பூண்டி, வெள்ளியங்கிரி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் அவ்வப் போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திடீரென நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர். நீரின் வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியவுடன் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர், குறிப்பாக காலாண்டு தேர்வு விடுமுறை விடுபட்டதை தொடர்ந்து வார விடுமுறையும் கழிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாகவும், கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும், சிறுவாணி நீர் பகுதி, நொய்யல் ஆறு, பகுதியில் உள்ள குளம், குட்டைகள் ஆகியவை வேகமாக நிரம்பி என்று விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்பார்ப்பு வருகின்றனர்.
இதையும் படிக்க: குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தன் அசாத்திய நடிப்பின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனிப்பெரும் ஆளுமையாக விளங்கிய கலைத்தாயின் தவப்புதல்வனாக நடிகர் சிவாஜி கணேசன் கொண்டாடப்படுகிறார்.
1928-ம் ஆண்டு விழுப்புரத்தில் பிறந்த வி.சி.கணேசன், ஏழாவது வயதில் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி திருச்சியில் முகாமிட்டிருந்த மதுரை ஸ்ரீபாலகானசபா என்ற நாடகக் குழுவில் சேர்ந்தார்.
சிறுவனாக மேடையில் ஏறியவர், பெண் வேடம் உள்பட பல்வேறு வேடங்களில் நடித்தவரை கலைத்தாயின் கருணைக் கரங்கள் பற்றியது. 1946-ம் ஆண்டு திராவிடர் கழக மாநாட்டில் பேரறிஞர் அண்ணா எழுத்தில் உருவான சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற நாடகத்தல் கணேசனின் நடிப்பு அங்கிருந்த பெரியாரை வெகுவாக கவர்ந்தது.
அப்போது மேடையில் ஏறியவர் வி.சி.கணேசனுக்கு சிவாஜி கணேசன் என்ற பெயரிட, அந்த பெயரே காலத்துக்கும் நிலைத்து நின்றது. இதைத் தொடர்ந்து நாடக உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமான சிவாஜி கணேசனுக்கு நல்ல தொடக்கமாகவே அமைந்தது பராசக்தி.
தன் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் தனிகவனம் செலுத்திய சிவாஜி அதற்கேற்றவாறு உடல்மொழி, ஒப்பனை, நடை, நடிப்பு இவற்றையும் மாற்றியமைத்து ரசிகர்களை இன்பக் களிப்பில் மூழ்கடித்தார்.
பிற நடிகர்களைப் பொறுத்தவரை அதிகபட்சம் அவர்களது கண்கள் நடிக்கும், ஆனால் சிவாஜியை பார்த்தவர்களுக்குத்தான் தெரியும், அவரது கன்னமும், தலைமுடியும் நடிக்கும் என்று.
சிவாஜி கணேசன் என்ற ஒரு நடிகர் இல்லையென்றால் கப்பலோட்டிய தமிழன், ராஜராஜசோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஏன்? இதிகாசத்தில் வந்த திருமால், கர்ணன், சிவபெருமானின் உருவமே அறியாமல் போயிருக்கலாம் என்று கூட கூறலாம்.
தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சிவாஜி கணேசன் போல எந்த நடிகரும் நடித்துப் பார்ப்பதற்கு முயற்சிக்கலாமே தவிர, இன்னொரு சிவாஜி என்றைக்குமே உருவாகி விட முடியாது என்பதை தமிழ் சினிமா அறிந்திருக்கும். சிவாஜி எனும் நட்சத்திரம் திரைவானில் என்றென்றும் ஜொலித்துக் கொண்டிருக்கும்.
இதையும் படிக்க: வலுப்பெரும் எடப்பாடி கூட்டணி