பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிகின்றனர்
மேலும் இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, விஜய் டிவி புகழ் மற்றும் ராமர் என பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4- ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து வெளியிட்டநிலையில், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இந்த படம் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.