CM - ஆக ஆசை.....கல்யாணம் பண்ணிக்க சொல்லி லவ் டாச்சர் பண்ண கூடாது: ஜாமினில் வந்த பின்னரும் அடங்காத மீரா மிதுன்...

எனக்கு தமிழக முதல்வராக வரவேண்டும் என்ற ஆசை உள்ளது என மீரா மிதுன் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

CM - ஆக ஆசை.....கல்யாணம் பண்ணிக்க சொல்லி லவ் டாச்சர் பண்ண கூடாது: ஜாமினில் வந்த பின்னரும் அடங்காத மீரா மிதுன்...

சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக திகழ்பவர் நடிகை மீரா மிதுன். மாடலிங்கில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீரா கலந்து கொண்டிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய செயல்களால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருந்தார்.

மேலும், நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் தேவையில்லாமல் பிரபலங்களையும், மக்களை குறித்தும் அவதூறாக பேசியதால் போலீசார் அவரை கைது செய்து இருந்தார்கள். சமீபத்தில் தான் இவர் ஜாமீனில் இருந்து வெளியே வந்தார். இதனிடையே இவர் பேய காணோம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் இப்போது மீண்டும் என்னை பத்தி தப்பான செய்திகள் பரவி வருகிறது. அதற்கான விளக்கம் கொடுக்க தான் இந்த வீடியோ போட்டு இருக்கேன். நான் யாரும் யாரையும் லவ் பண்ணல, கல்யாணமும் பண்ணிக்கவில்லை. சீனியர் நடிகர்களை எல்லாம் தேவையில்லாமல் இதில் இழுக்க தேவையில்லை. சோசியல் மீடியாவில் நிறைய விதமான விஷயங்கள் வரும். அதை எல்லாம் கற்பனை பண்ணி பேச வேண்டாம். நான் சீனியர் நடிகர்களை மிகவும் மதிக்கிறேன் என பேசியுள்ளார்.

இந்த உலகத்தில் நிறைய கிரிமினல்கள் இருக்கிறார்கள். என்னமோ தெரியவில்லை அநியாயங்கள் அதிகமாக தலைதூக்கி இருக்கிறது. என் பெயரை புகழுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல் தேவை இல்லாமல் என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்தால் நான் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். மேலும், நான் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஓடி விட்டேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. நான் யாரு? எப்படிப்பட்டவள்? என்று மக்களுக்கு தெரியும்.

 நான் இந்த படத்திற்காக என்னை எவ்வளவு கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இப்படி இருக்கும் நிலையில் நான் எப்படி படத்தை விட்டு ஓடிப்போக முடியும். நான் ரொம்ப சோர்ந்து போய்விட்டேன். என்னை கீழே தள்ளி விட எவ்வளவோ வேலைகள் செய்து இருந்தாலும் அதில் இருந்து நான் எழுந்து நிற்கிறேன். என் புகழைப் பயன்படுத்தி நாசமாக நினைக்கிறார்கள். இது ஒரு பொண்ணோட வாழ்க்கை. ஒரு நடிகை உடைய வாழ்க்கை.

அதே போல் எனக்கு சில வருடங்களாகவே முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறேன். ஆனால், அது நடக்கக் கூடாது என்று சிலர் நினைத்துதான் என்னை தவறாக சித்தரித்து வருகிறார்கள். நான் எதற்கும் பயப்படமாட்டேன், பொய் பேச மாட்டேன். இது மக்களுக்கும் தெரியும். துணிந்து போராடுவேன் என்று கூறியிருக்கிறார்.