அடேங்கப்பா! எத்தனை கோடி.. யாருப்பா நீங்கலாம்? மொத்தத்தையும் பறிமுதல் செய்த போலீஸ்!!

ஆந்திர மாநிலம் குண்டூரில் தனியார் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட  4 கோடியே 85 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இது தொடர்பாக டிரைவர் மற்றும் உதவியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடேங்கப்பா! எத்தனை கோடி.. யாருப்பா நீங்கலாம்?  மொத்தத்தையும் பறிமுதல் செய்த போலீஸ்!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீ காகுளத்தில்  இருந்து குண்டூர் செல்லும் தனியார் பேருந்தில் அதிக அளவில் பணம் கொண்டு செல்வதாக போலீசாருக்கு ரகசியம் தகவல் கிடைத்தது. இதையடுத்து  மாவட்ட எஸ்.பி.ராகுல் தேவ் ஷர்மா தலைமையில் போலீசார் நல்லசெர்லா மண்டலம் வீரவல்லி டோல்கேட் அருகே அந்த  பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்

அப்போது பேருந்தின் லக்கேஜ் வைக்கும் இடத்தில் பணத்தை பண்டல் பண்டலாக  பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பேருந்தின் டிரைவர், அவரின்  உதவியாளர் மற்றும் சந்தேகபடும்படி  பேருந்தில் இருந்த மேலும் 2 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com