குடிபோதை ஆசாமி அட்ராசிட்டிஸ்.. பாம்புகளுக்கு படைத்த முட்டைகளை உடைத்து குடித்த நபரின் வீடியோ வைரல்!!

குடிபோதையில் பாம்புகளுக்கு படைக்கப்பட்ட முட்டைகளை உடைத்து குடிக்கும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குடிபோதை ஆசாமி அட்ராசிட்டிஸ்.. பாம்புகளுக்கு படைத்த முட்டைகளை உடைத்து குடித்த நபரின் வீடியோ வைரல்!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வள்ளியூர் காவு என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது 14 - நாட்கள் நடக்கும் திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் உள்ள இரு ஆலமரங்களுக்கு அடிப்பகுதியில் அமைந்துள்ள பாம்புகள் குடியிருக்கும் புற்றுகள் அதிக அளவில் காணப்படுகிறது.  இதுவே இந்த கோவிலின் தனி சிறப்பு. 

இந்த நிலையில் பக்தர்கள் நாகபாம்பு தெய்வங்களுக்கு படைத்த 100க்கும் மேற்பட்ட முட்டைகளில் ஒரு சில முட்டைகளை குடிபோதையில் இருக்கும் ஒருவர் உடைத்து குடித்துள்ளார். இந்த நிகழ்வை அங்கிருந்த ஒரு சிலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்து இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com