”பிரதமர் நரேந்திர மோடியினால் மட்டுமே எல்லாம் சாத்தியம். மோடியின் அரசு சமூகத்தின் கடைசி நபர் வரை சென்றடைகிறது”கட்டானா

”பிரதமர் நரேந்திர மோடியினால் மட்டுமே எல்லாம் சாத்தியம். மோடியின் அரசு சமூகத்தின் கடைசி நபர் வரை சென்றடைகிறது”கட்டானா

பிரதமர் நரேந்திர மோடியினால் மட்டுமே எல்லாம் சாத்தியம். மோடியின் அரசு சமூகத்தின் கடைசி நபர் வரை சென்றடைகிறது.” மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட பின் முதல் முறையாக பாஜகவின் மாநில தலைமையகத்திற்கு வந்த குலாம் அலி கட்டானாவை, தொழிலாளர்கள் மேளம் முழங்க உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும் தெரிந்துகொள்க: ஜம்மு-காஷ்மீர் தேர்தலின் துருப்புச் சீட்டா குலாம் அலி? பாஜகவின் திட்டம் என்ன?

கட்டானாவின் நன்றி:

அனைவரின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறும் சிறப்பான பணியை மோடி அரசாங்கம் செய்து வருகிறது என்று கூறியுள்ளார் கட்டானா. குஜ்ஜார் சமூகத்தை பெருமைப்படுத்தும் பணியை மோடி அரசு செய்துள்ளது. ராஜ்யசபா உறுப்பினரான அவர், பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் உதவியுடன் பொதுமக்களுக்காக பணியாற்றி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் தலைவர் ரவீந்திர ரெய்னா, எம்பி ஜுகல் கிஷோர் சர்மா,  மாநில முன்னாள் தலைவர் அசோக் கஜூரியா, முன்னாள் எம்பி ஷம்ஷர் சிங் மன்ஹாஸ், முன்னாள் அமைச்சர் சத் சர்மா, முன்னாள் துணை முதலமைச்சர் கவிந்தர் குப்தா, துணைத் தலைவர் யுத்வீர் சேத்தி, அமைப்பு பொதுச் செயலாளர் அசோக் கவுல், பொதுச்செயலாளர் டாக்டர் தேவேந்திர குமார் மனேயல், தலைமையக பொறுப்பாளர் பிரியா சேத்தி, தலைமை செய்தி தொடர்பாளர் சுனில் சேத்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

ரவீந்திர ரெய்னா:

”பொறியாளர் கட்டானா ஒரு விசுவாசமான தொழிலாளி போல் இதுவரை பணியாற்றியுள்ளார். ஒரு சாதாரண தொழிலாளியில் மறைந்திருக்கும் திறமையை பாஜக எப்போதுமே அங்கீகரிக்கிறது. குஜ்ஜர் பக்கர்வால் சமூகத்தின் உண்மையான நலம் விரும்பி பாஜக மட்டுமே. காங்கிரஸ், பிடிபி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை குஜ்ஜர் பக்கர்வால் சமூக மக்களை தவறாக வழிநடத்தியுள்ளன” என்று ரவீந்திர ரெய்னா கூறியுள்ளார்.

குர்ஜார் தேஷ் அறக்கட்டளை வாழ்த்து:

ஜம்மு குஜ்ஜர் சமூகத்தைச் சேர்ந்த குலாம் அலி கட்டானாவின் பெயரை மாநிலங்களவைக்கு பரிந்துரைத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு குர்ஜார் தேஷ் அறக்கட்டளை நன்றி தெரிவித்துள்ளது. மாநிலத்தின் முதல் குர்ஜார் முஸ்லிம் தலைவரின் பெயர் மாநிலங்களவை உறுப்பினருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது மதிப்புக்குரிய செயல் என அறக்கட்டளையின் தலைவர் ஷா முகமது சவுத்ரி கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ”இது பெருமைக்குரிய விஷயம். கட்டானாவின் மீது சமூக மக்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.” என ஷா முகமது சவுத்ரி பேசியுள்ளார். மேலும் அப்துல் ஹமீத் சௌத்ரி, சௌத்ரி அர்ஷத் அலி, ஹமீத் ஹுசைன், எம்.எஸ்.சௌஹான், ஷௌகத் ஜாவேத் சௌத்ரி, யூசுப் கெப்பர், சஜ்ஜத் மஜீத் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பழங்குடி சமூகங்கள் பிரதமருக்கு நன்றி:

ஜம்மு பழங்குடியின சமூகத் தலைவரான பொறியாளர் குலாம் அலி கட்டானாவை ராஜ்யசபாவுக்குப் பரிந்துரைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜம்மு காஷ்மீர் பழங்குடி சமூகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். பழங்குடி ஆராய்ச்சி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் கீழ் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது, இது பழங்குடி ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜாவேத் ராஹி தலைமையில் நடைபெற்றது.

சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் இருந்து குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பொறியாளர் குலாம் அலி கட்டானா ஜம்மு காஷ்மீர் மக்களின் குறிப்பாக குஜ்ஜர்கள், பக்கர்வால்கள், காடிஸ், சிப்பி மற்றும் பிற பழங்குடியினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார் என்றும் நம்பப்படுகிறது. நிகழ்ச்சியில் இஷ்தியாக் அகமது, குலாம் ரசூல், தின் முகமது, அலீம் உத் தின் சௌத்ரி, டாக்டர் இர்ஷாத் அகமது, நசீர் அகமது கட்டனா மற்றும் வரஸ்ட் அலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: ஊழலால் திணறுகிறதா மம்தாவின் திரிணாமுல்!!!