நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்த முயன்ற கேரள எம்.பிக்களால் பரபரப்பு!!

நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்த முயன்ற கேரள எம்.பிக்களால் பரபரப்பு!!

நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்த முயன்ற கேரள எம்.பிக்களை, போலீசார் வெளியேற்ற முயன்றதால், இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்- காசர்கோடு இடையிலான சில்வர் லைன் ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த கேரளா அரசு மும்முரம் காட்டி வருகிறது.

இதற்கான சர்வே பணிகள் நடந்து வரும் நிலையில், இத்திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில் நாடாளுமன்றம் வந்த கேரள காங்கிரஸ் எம்.பிக்கள், விஜய்சவுக் பகுதியில் பேரணி நடத்துவதை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை அங்கிருந்து அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com