ஜம்மு-காஷ்மீருக்கு முழு அந்தஸ்து வழங்க வேண்டும் ... பா.சிதம்பரம்

ஜம்மு-காஷ்மீருக்கான முழு அந்தஸ்தையும் மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு முழு அந்தஸ்து வழங்க வேண்டும் ... பா.சிதம்பரம்

இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டிருந்த அவர், ஜம்மு-காஷ்மீர் ஒரு ரியல் எஸ்டேட் நிலம் அல்ல, மாறாக அது ஒப்பந்தம் மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட ஒரு மாநிலம் என தெரிவித்துள்ளார்.

எனவே ஜம்மு-காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானம் கொண்டு வரவேண்டும், அதுவே காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கான முதல் நடவடிக்கையாக இருக்கும் என கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com