கர்நாடக மாநிலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்த 18 அரசு அதிகாரிகளை குறிவைத்து இன்று அதிகாலை முதல் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 75 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் கோடிக்கணக்கில் ரொக்கப்பணம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பல நூறு கோடி மதிப்பில் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து துறை, பெங்களூரு வளர்ச்சி குழு, வனத்துறை, பாசனத்துறை, பொதுப்பணித்துறை, சமூக நலத் துறை சுற்றுச்சூழல் துறை போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் 18 அரசு உயர் அதிகாரிகள் வீட்டில் நடத்தப்படும் இந்த சோதனை கர்நாடக அரசு அதிகாரிகள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.