டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா ஆகியோரை சந்திக்க கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா டெல்லி சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறினார்.
மேலும், மேகதாது அருகே அணை கட்டுவது கர்நாடகா மாநிலத்தின் உரிமை என்றும், அதை கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என உறுதிப்பட தெரிவித்தார். இந்நிலையில், அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்பது தொடர்ந்து வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
எடியூரப்பாவின் கருத்து தொடர்பாக பதிலளித்துள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மேகதாது அணை கட்டமுடியாது என்றும், இந்த விவகாரத்தில் எடியூரப்பா அரசியல் ஆதாயம் தேடி வருவதாகவும் கூறினார்.