அசானி புயல் எதிரொலி - சென்னையில் உள்நாட்டு விமானங்கள் ரத்து..! அதிருப்தியில் மக்கள்!

அசானி புயல் காரணமாக சென்னையில் இன்று 12 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அசானி புயல் எதிரொலி - சென்னையில்  உள்நாட்டு விமானங்கள் ரத்து..! அதிருப்தியில் மக்கள்!

அசானி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புயல் ஒடிசா, ஆந்திரா அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்ட நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com