தமிழக ஆளுநராக பதவியேற்றுள்ள ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு புத்தகங்களை பரிசாக வழங்கியுள்ளார்.
தமிழர் நாகரிகம் தொடர்பான கீழடி என்ற புத்தகத்தையும், எழுத்தாளர் முத்தையாவால் திருத்தம் செய்யப்பட்ட சென்னை வரலாறு தொடர்பான மெட்ராஸ் என்ற புத்தகத்தையும் பரிசாக வழங்கியுள்ளார்.
இரண்டு புத்தகங்களும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டவை ஆகும். தமிழ் கலாச்சாரம் முன்னே வந்து நிற்குமாறு உள்ள புத்தகங்களை தேர்ந்தெடுத்து, அதனை விருந்தினர்களுக்கு வழங்குவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.