பட்டாசு வெடித்ததில் சிறுமி உயிரிழப்பு : முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

ராணிப்பேட்டையில் பட்டாசு வெடித்ததில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கத்தில் தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசு வெடித்ததில், ரமேஷ் - அஸ்வினி தம்பதியரின் 4 வயது மகள், நவிஷ்கா தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். அத்துடன், பலத்த காயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு 4 விரல்கள் அகற்றப்பட்டன. இதில் மது போதையில் நாட்டு வெடி வெடித்து, விபத்து ஏற்படுத்தியதாக சிறுமியின் பெரியப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுமி உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், சிறுமி நவிஷ்கா குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயும், காயமடைந்த விக்னேஷூக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com