தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே சோழபுரம் சின்ன அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் மாலியா என்கிற சோனாலி. இவர் கும்பகோணம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சக்திதாஸ் என்பவரை கடந்த 2 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் மாலியா. தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மாலியா தனது தாய் வீட்டில் வசித்து வந்து உள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாலியாவுக்கு உறவினர்களும் ஆறுதல் கூறிவந்தனர். இந்த சூழ்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனஉடைச்சலில் மாலியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாலியா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாலியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை வழக்கு சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.