தஞ்சை மாவட்டம் வடவாற்றில் இருந்து பிரிந்து அம்மாப்பேட்டை, கோவில்வெண்ணி, வழியாக திருவாரூர் வரை 45 கிலோமீட்டர் வரை புத்தூர் வாய்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலமாக சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பாசன வசதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது குறுவை சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையிலும் புத்தூர் வாய்க்காலை தூர் வாராததால், புதர் மண்டிக் கிடக்கும் வாய்க்காலில் தண்ணீர் கடைமடை பகுதிக்கு வராது என தெரிவிக்கும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் உடனே போர்க்கால அடிப்படையில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாப்பேட்டை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.