திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வராஜ் இவர் நேற்று இரவு வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் மாடியில் தூங்கியுள்ளார். பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3சவரன் நகை 40000பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. அதனைதொடர்ந்து அருகருகே உள்ள மேலும் இரண்டு வீடுகளில் இருந்தும் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.