தமிழகத்தில் இரண்டாவது நாளாக 5 ஆயிரத்துக்கு கீழ் கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் இரண்டாவது நாளாக 5 ஆயிரத்துக்கு கீழ் கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் ஒரேநாளில் புதிதாக 4 ஆயிரத்து 512 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து, 39 ஆயிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 118 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை தொற்று காரணமாக மொத்தம் 32 ஆயிரத்து 506 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 6 ஆயிரத்து 13 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 563 பேருக்கும், ஈரோட்டில் 493 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 275 பேருக்கு மட்டுமே தொற்று பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.