அகழ்வாராய்ச்சியில் 1-ம் நூற்றாண்டு பொருட்கள் கண்டெடுப்பு!!

அகழ்வாராய்ச்சியில் 1-ம் நூற்றாண்டு பொருட்கள் கண்டெடுப்பு!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் இரண்டாம் கட்ட அகழ்வாராட்சியில், பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்துள்ள வடக்குப்பட்டு ஊராட்சியில், சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில், கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடந்தன. மூன்று மாதங்கள் நடைபெற்ற முதற்கட்ட தொல்லியல் ஆய்வில் , தங்க அணிகலன்கள் உள்ளிட்ட பழங்கால வரலாறுகளை தெரிந்து கொள்ளும் பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைத்தது. இதனை அடுத்து மே மாதம் 19ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி துவங்கியது. 

இரண்டாம் கட்ட  அகழ்வாராய்ச்சி துவங்கப்பட்ட ஒரு மாதத்தில், பெண்கள் விளையாடக்கூடிய, வட்டச்சில்லுக்கள், கூம்பு வடிவிலான ஜாடிகள், பானைகளின் வடிவத்தை உருவாக்கும்  கருவிகள், பானை ஓடுகள் முத்திரையை ஆகியவை கிடைக்கப்பட்டுள்ளன.

தங்கத்திலான சிறு தகடு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செம்பிலான குங்குமச்சிமிழ் போல் காட்சியளிக்க கூடிய சிறிய கிண்ணம்  ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆணி போன்ற தண்டுப் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பல்வேறு கற்களால் செய்யப்பட்ட மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 (10மீx10மீ) அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 800 தொல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது அகழ்வாய்வில் தமிழ்- பிராமி எழுத்துப்பொறிப்புள்ள பானை ஓடு, சுடுமண் பொம்மைகள், அணிகலன், போன்ற தொல்பொருட்கள் கிடைத்துள்ளது. 

இதுவரை வட தமிழகத்தில் காஞ்சிபுரம், பட்டரைப்பெரும்புதூர் போன்ற இடங்களில் மட்டுமே தமிழ்-பிராமி எழுத்துப்பொறிப்புகள் உள்ள பானை ஓடுகள் கிடைத்துள்ளது. எழுத்துப்பொறிப்புடன் கூடிய பானை ஓடு கிடைத்திருப்பது மிகவும் முக்கிய கண்டுபிடிப்பு என்று தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்-பிராமி எழுத்துப்பொறிப்புகள் கூடிய பானை ஓடுகள் கிடைத்திருப்பது , கி.மு.முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது என தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க || இலங்கை சிறையில் தவிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள்... வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் கடிதம்!!