விவசாயியை தாக்கிய காட்டு யானை... காவலுக்கு சென்றபோது பரிதாபம்...
தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலத்திற்கு காவலுக்குச் சென்ற விவசாயி காட்டுயானை தாக்கி பலி.

கோயம்பத்தூர்: ஆன்லைன் வேலை வாங்கி தருவதாக கூறியவரிடம் 13 லட்சத்தை இழந்துள்ளார் கோயம்புத்தூரை சேர்ந்த நபர்.
கோயம்பத்தூர், உப்பிலிபாளையத்தை சேர்ந்த டொமினிக் சேவியோ என்னும் வாலிபர், தனது தொலைபேசியில் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து, வாட்ஸாப் மூலம் ஒரு குறுஞ்செய்தி பெற்றார். அதில், ஆன்லைன் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக குறிப்பிட்டிருந்தது.
இந்த குறுஞ்செய்தியை நம்பிய டொமினிக், அடையாளம் தெரியாத அந்நபரை தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். முதலில், ஒரு சில சிறிய பணிகளை ஆன்லைன் மூலம் முடிக்குமாறு கூறியுள்ளார்.
அதன் பின்னர், அதிக வருவாய் ஈட்ட வேண்டுமெனில், முதலீடு செய்ய வேண்டுமென, அந்நபர் டொமினிக்கிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறியபடியே, ரூ 12.98 லட்சத்தை பல தவணைகளில் செலுத்தி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், அந்நபர் மீது டொமினிக்குக்கு சந்தேகம் வரவே, அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். பின்னர் சைபர் க்ரைம் போலீசாரிடம் அந்நபர் மீது புகார் அளித்தார். டொமினிக்கின் புகாரை பெற்றுக்கொண்டு, சைபர் க்ரைம் போலீசார், மோசடி செய்த நபர் மீது பிரிவு 420 மற்றும் 66Dன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கல்வித் துறைக்கு இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் மாதத்திலேயே பள்ளிக்கல்வி துறையில் முழு அதிகாரங்களைக் கொண்ட ஆணையர் பதவி உருவாக்கப்பட்டது. இதன் மூலம், 150 ஆண்டுகளாக இயக்குனர் பதவியில் இருந்த அதிகாரம் ஆணையருக்கு மாறியது. இந்த அறிவிப்பு பல்வேறு அரசியல் கட்சிகள் இடையேயும், ஆசிரியர் சங்கங்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க : ”நாட்டிலேயே கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு சிறப்பாக வளர்ந்து வருகிறது” - ஆளுநர் பெருமிதம்!
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர் பதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியாக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குனராக இருந்த மு.கண்ணப்பன், தற்போது தொடக்கக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா இரயில் விபத்தில் தகவல் கிடைக்காத 6 பேர் பற்றி ஓரிரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், தனியார் நிறுவனம் சமூக பொறுப்பு நிதி மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கியது.
இந்த நிகழ்வில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வினை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுற்றுச்சூழலை மேம்படுத்த சிறந்த எடுத்துக்காட்டாக மஞ்சப்பை திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தனியார் பங்களிப்போடு 10 ஆயிரம் மரங்களை சென்னை முழுவதும் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இது போன்ற திட்டங்களை அரசு மட்டும் செயல்படுத்தினால் போதாது, மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
ஒடிசா ரயில் விபத்தில் தகவல் கிடைக்காத எட்டு தமிழர்கள் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அவர், நேற்று ஒடிசாவில் இருந்து கிளம்பும்போது எந்த தெளிவும் இல்லாமல் இருந்ததாகவும், இங்கே வந்து அரசு அதிகாரிகளிடம் பேசும் பொழுது அந்த 8 பேரும் பாதுகாப்பாக இருந்ததை அறிந்துகொண்தாக கூறினார். மேலும் அதில் 2 பேரிடம் பேசி விட்டதாகவும், மற்ற ஆறு பேர் பாதுகாப்பாக உள்ளனர் என்று உடன் பயணித்தவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவத்துள்ளார். தொடர்ந்து மீதமுள்ள 6 பேரிடம் தெளிவாக பேச முடியவில்லை என்பதால் ஓரிரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிக்க:"இஸ்லாமியர்களின் உணர்வுப் பூர்வ தோழன் அதிமுக" ஜெயக்குமார் உருக்கம்!
நாட்டிலேயே கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு சிறப்பாக வளர்ந்து வருவதாக ஆளுநர் ஆர் என் ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உயர்கல்வி நிறுவனங்களின் பாடப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது என்ற தலைப்பில் 2 நாட்கள் நடைபெறும் துணை வேந்தர்கள் கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் ரவி, பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள் கட்டமைப்பு மேம்பட்டுள்ளதாகவும், இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...!
தொடர்ந்து பேசிய அவர், உலக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் மூன்றாவது இடத்திற்கு இந்தியா வளர்ந்துள்ளதாகவும், இந்தியா முழுவதும் டிஜிட்டல் மையமாகியுள்ளதால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன் வருவதாக தெரிவித்தார்.
மேலும், நாட்டிலேயே கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு சிறப்பாக வளர்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்த ஆளுநர், தமிழகத்தில் சிறந்த கல்வி மற்றும் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்திருப்பதா? - இபிஎஸ் கண்டனம்!
அதேபோல், 7 முதல் 9 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரித்துள்ள வானிலை மையம், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியல் வரை பதிவாகக் கூடும் எனவும் கணித்துள்ளது.