லேப்டாப் சாா்ஜரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.12 லட்சம் மதிப்புடைய தங்க செயின்கள் பறிமுதல்.....

துபாயில் இருந்து சென்னைக்கு லேப்டாப் சாா்ஜரில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.12 லட்சம் மதிப்புடைய 285 கிராம் தங்க செயின்கள் மற்றும் 2 போன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  
லேப்டாப் சாா்ஜரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.12 லட்சம் மதிப்புடைய தங்க செயின்கள் பறிமுதல்.....

துபாயிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை பன்னாட்டு விமானநிலையத்திற்கு வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சோ்ந்த ஒரு பயணியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் அந்த பயணி வைத்திருந்த லேப்டாப் சாா்ஜருக்குள் மறைத்து வைத்திருந்த எடுத்து வைத்த தங்க செயின்களை பறிமுதல் செய்தனர். அந்த தங்க செயின்களின்  எடை 285 கிராம், அதோடு அவருடைய சூட்கேஸ்க்குள் மறைத்து வைத்திருந்த இரண்டு ஐ போன்களையும் பறிமுதல் செய்தனா். 

அதனைதொடர்ந்து தங்கச் செயின்கள்  மற்றும் ஐ போன்களை துபாயிலிருந்து கடத்தி வந்த சென்னை பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com