சாா்ஜாவிலிருந்து சென்னை பன்னாட்டு விமானநிலையம் வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது சிவகங்கையை சோ்ந்த 2 ஆண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்களை நிறுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
அதன்பின்பு அவா்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது இருவரின் உள்ளாடைகளுக்குள் 7 பாா்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுப்பிடித்தனா்.
அந்த பாா்சல்களில் 1.5 கிலோ தங்கப்பசை உருண்டைகள் இருந்தது தெரியவந்தது. அதன் சா்வதேச மதிப்பு ரூ.71.72 லட்சம் என தெரிவித்த அதிகாரிகள், தங்கப்பசை உருண்டைகளை பறிமுதல் செய்து, கடத்தல் பயணிகள் இருவரையும் கைது செய்தனா்.
இதற்கிடையே சென்னை பன்னாட்டு விமானநிலையத்தின் வருகை பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் மா்ம பாா்சல் கிடந்ததை விமானநிலைய தூய்மை பணியாளா்கள் பாா்த்துவிட்டு,மேலாளருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டி-டக்டா் மற்றும் மோப்ப நாயுடன் வந்து மா்ம பாா்சலை ஆய்வு செய்தனா்.அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து பாா்சலை பாதுகாப்பு அதிகாரிகள் பிரித்து பாா்த்தனா். அதனுள் சில்வா் பேப்பா் பாா்சலில் தங்கப்பசை மறைத்து வைத்திருத்ததை கண்டுப்பிடித்தனா். அதனுள் இருந்த 1.8 கிலோ தங்கப்பசையை கைப்பற்றி, சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
அதன் சா்வதேச மதிப்பு ரூ.87.82 லட்சம் என தெரியவந்தது. இந்த தங்கப்பசை பாா்சல் துபாயிலிருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்டதாக இருக்கலாம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.