6 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்!

கோவை, நீலகிரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்!

கோவை, நீலகிரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.  இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வங்க கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்திஉள்ளது.