“அமலாக்கத்துறை சோதனைக்கு பதுங்க மாட்டேன்” - ஆ.ராசா பேச்சு
அமலாக்கத்துறை சோதனைக்கு பதுங்க மாட்டேன் என்றும், சோதனையை சட்டரீதியாக சந்திப்பேன் என்றும் தி.மு.க. எம்.பி. ஆ. ராசா தெரிவித்தார்.
சரவணம்பட்டி பகுதியில் திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் திமுக எம்பி. ஆ.ராசா பங்கேற்று பேசினார்.
2023-ல் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு போய் சேர்த்துள்ளேன் என பிரதமர் மோடி
பாராளுமன்றத்தில் பெருமையாக பேசினார் என்றும் அதற்கு பதிலுறைக்கு தன்னை அனுமதிக்க வில்லை எனவும் கூறினார்.
ஆனால் 53 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு போய் சேர்த்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்றும் தமிழகம்
50 ஆண்டுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர் சந்திப்பில் “அமலாக்கத்துறை சோதனைக்கு பதுங்க மாட்டேன்; சட்டரீதியாக எதிர்கொள்வேன்”, என்றும் அமலாக்கத்துறை சோதனை சாதாரணமாக நடப்பது தான் எனவும் கூறினார். கோவையில் நேற்று அமலாக்கத்துறை ஆ.ராசாவிற்கு சொந்தமான இடத்தில் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு..!