தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்சாமி வயது 55,இவரது மனைவி சவரியம்மாள். அருள்சாமி சம்சா வியாபாரம் செய்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் 8 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் இரண்டு மாதங்களாக தொடர் மழை மற்றும் கொரோனா காரணத்தால் சரிவர தொழில் சரியில்லாத காரணத்தால் வங்கிக் கடன் தவணையை செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் போனிலும் நேரிலும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாகவும் மரியாதைக் குறைவாக பேசியதாகவும் தெரிகிறது. இதில் விரக்தி அடைந்த அருள்சாமி மற்றும் சவரியம்மாள் இருவரும் நேற்று மதியம் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
இதுபற்றி அருள்சாமி மற்றும் சபரியம்மாளின் மகன் ஆரோக்கிய செபஸ்டின் கொடுத்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரது உடலையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் இது பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கி ஊழியர்கள் கொடுத்த டார்ச்சரினால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.