உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 27.31 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்

சாா்ஜாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ. 27.31 லட்சம் மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 27.31 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்

சாா்ஜாவிலிருந்து சென்னை  பன்னாட்டு விமானநிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சோ்ந்த 31- வயது ஆண் பயணி ஒருவா்,தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருள் எதுவும் இல்லை, என்று கூறிவிட்டு, கிரின்சேனல் வழியாக வெளியே சென்றாா்.

அதனைதொடர்ந்து சந்தேகத்தின்பேரில் அந்த பயணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவரை சோதனை செய்தனர். அதில் அவருடையை உள்ளாடைக்குள் 4 சிறிய பாா்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கைப்பற்றினர்\

அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது அதனுள் தங்கப்பசை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com