துபாய், சார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்...

துபாய் மற்றும் சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ. 47 லட்சம் மதிப்புள்ள தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாய், சார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்...

சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை  செய்தனர். அதில் ஒரு பயணியிடமிருந்து 771 கிராம் எடைக்கொண்ட ரூ.37.54 மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் துபாயிலிருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணியிடம் 193 கிராம் எடைக்கொண்ட  மதிப்புள்ள தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.9.40 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின்னர் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com