உலகிலேயே சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது - மா.சுப்பிரமணியன் பெருமிதம்

உலகிலேயே சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது - மா.சுப்பிரமணியன் பெருமிதம்

உலகிலேயே சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த மா.சுப்பிரமணியன்:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் புதியதாக கட்டப்பட்ட தனியார் மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் இதுவரை 91 ஆயிரத்து 86 பேர் விரைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பயனடைந்துள்ளதாக தெரிவித்தார். 

மருத்துவ கட்டமைப்புகளில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது:

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகளவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மருத்துவ கட்டமைப்புகளில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக தெரிவித்தார். மேலும், 381 நடமாடும் வாகனங்கள் மூலம் சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.. 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com