சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களை முதல்வர் இன்று திறந்து வைத்தார். ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் 25 காவல் நிலையங்களும், தாம்பரம் ஆணையரக கட்டுப்பாட்டில் 20 காவல் நிலையங்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் சிறப்பு அதிகாரியாக ரவியும், ஆவடி ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிகழ்வில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.