தமிழக கோயில்களில் தமிழ் பெயர்கள்... முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை... அமைச்சர் சேகர்பாபு பேட்டி...

கோயில்களில் சமஸ்கிருத பெயர்களுடன் தமிழ் பெயர்களும் சேர்ந்து இடம்பெற முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக கோயில்களில் தமிழ் பெயர்கள்... முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை... அமைச்சர் சேகர்பாபு பேட்டி...

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை புரசைவாக்கம் கங்காதேசுவரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதேசுவரர் திருக்கோயில் 3 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.15 லட்சம் செலவில் திருத்தேர் மேம்படுத்தப்படும் என்றும் நல்ல வடிவமைப்பில் மரத்தேர் செய்வதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விரைவில் பணிகள் தொடங்கும். சிதிலமடைந்த வாகனங்கள் புதுப்பிக்கப்படும்.

24 கோடி குளத்திற்கு செலவிடப்பட்டதாக  வெளியான செய்தி தவறானது என்றும்  குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கவில்லை என விளக்கமளித்தார். மேலும் கோயிலின் குளம் சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் குளம் மேம்படுத்தப்படும். கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்படும், நிலுவையில் உள்ள வாடகை தொகை பெற்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

தமிழகத்தில் உள்ள சில கோவில்கள் பெயர்கள் சமஸ்கிருத பெயரில் உள்ளது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வியெழுப்பியதற்கு இது போன்ற வேண்டுகோள்கள் பல இடங்களில் இருந்து வருகிறது. சில கோவிகளுக்கு தமிழ் மற்றும் சம்ஸ்கிருத பெயர்களில் உள்ளன. இது குறித்து தீர ஆய்வு செய்து, முதல்வர் அனுமதியுடன் இரண்டு பெயர்களிலும் கோவில்கள் பெயர்கள் அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 கல்லூரிகள் இயங்கி வருகிறது. புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டபேரவையில் அறிவித்துள்ளோம். இதில் 4 கல்லூரிக்கு உயர்கல்வி துறையிடம் அனுமதி பெற்றுள்ளோம்.

இந்த கல்லூரிகளை இந்த ஆண்டு 
திறக்க உள்ளோம். தனியார் கட்டிடத்தில் அனுமதி பெற்று வாடகையில் கல்லூரியை நடத்த உள்ளோம். சென்னை 2 இடங்களில் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்துள்ளோம். சென்னை கொளத்தூரில் கல்லூரி தொடங்க பூம்புகார் நகரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்படும் கல்லூரிகளில் ஆன்மீக சார்ந்த பாடமும் நடத்தப்படும். சென்னையில் இருக்கின்ற தனியார் கல்லூரிக்கு போட்டிபோடும் விதத்தில் இந்த கல்லூரிகள் நடைபெறும் என பேசினார்.

ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படியே கோயில்கள் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று  முழுமையாக குறைந்த பிறகு, வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில் திறப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். போராட வலுவான காரணம் இல்லாததால் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காளிகாம்பாள் கோவிலில் பாஜக போராட்டம் நடத்துவதால் இன்று ஒரு நாள் பக்தர்களின் வழிபாடு பாதிக்கப்படும். ஏற்கனவே 4 நாட்கள் கோவில்கள் திறந்துள்ள நிலையில், பாஜகவின் போராட்டத்தால் 3 நாட்கள் ஆகியுள்ளது என்றும் பாஜகவினர் போராடுவதற்கு காரணம் தேடுகிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்ததும் கோயில்களை திறக்க நடவடிக்கை எடுப்பார். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பாஜக போராட்டம் நடத்துகிறது. ஏற்கனவே 3 நாட்கள்தான் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் இருந்தனர். ஆனால் பாஜகவின் போராட்டத்தால் பக்தர்கள் இன்று கோயிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

புரோக்கர்கள் மூலம் பணம் வசூலிக்கும் முறையை ஒழித்து முறைப்படுத்தப்படும். கோயில்களுக்கு பக்தர்கள் நன்கொடை அளிக்க இணையதளம் தொடங்கப்படும். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய் கிழமை 
பக்தர்கள் அதிகளவில் வருவதால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோனை செய்து செவ்வாய் கிழமை கோவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com