வட சென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்!

வட சென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.
வட சென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்!

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் ஆயிரத்து 810 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் 1-வது நிலையின் 1-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதே போல கடந்த சில நாட்களுக்கு முன் 2-வது நிலையின் 2-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது இரண்டு அலகுகளிலும் பழுது சரி செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com